கோட்டாவை வீட்டுக்கு அனுப்ப கட்சித் தலைவர்கள் முடிவு: தற்காலீக ஜனாதிபதியாக சபாநாயகர்!

நிறைவேற்று ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச உடனடியாக விலக வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்யத் தயார் என முடிவெடுத்த பின்னர் , கட்சித் தலைவர்களின் தீர்மானத்திற்கு உடன்படுவதாக கோட்டாபய முன்னதாக அறிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, சுமந்திரன் உள்ளிட்ட பல தலைவர்கள் ஜூம் அப்ளிகேஷன் மூலம் சம்பந்தப்பட்ட கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அரசியலமைப்பின் பிரகாரம் தற்காலிக ஜனாதிபதி பதவிக்கான கடமைகளை சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்திற்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக இணங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் டுவிட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி கீழே உள்ளது,

Leave A Reply

Your email address will not be published.