பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் கோரிக்கை!

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது என பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையிலும், அரசியலமைப்பு முறையிலும் தீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

எனவே இத்தருணத்தில் நாட்டின் அமைதியைப் பாதுகாக்க ஆயுதப் படையினருக்கும் பொலிஸாருக்கும் தேவையான ஆதரவை வழங்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொள்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.