ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பும் போராட்டாத்தில் 103 பேர் காயம்! அவர்களில் 11 ஊடகவியலாளர்கள் , சூடுபட்ட 3 பேர் !

கொழும்பு கோட்டை பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 103 பேர் காயமடைந்துள்ளனர். 55 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மூவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

அவர் தலையில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருப்பதாகவும் அவர் கூறினார். எனினும் காயமடைந்தவர்களில் 09 பெண்களும் அடங்குகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.