மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி சாவு.

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் வயல் காவலில் இருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருநூறுவில் – உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய கருணாகரன் என்பவரே இதன்போது பலியானவராவார்.

சம்பவ தினத்தன்று குறித்த நபர் தனது வீட்டிலிருந்து கண்டியனாறு பிரதேசத்தில் உள்ள தனது வயலைப் பராமரித்து காவலில் இருந்தபோது திடீரென வயலினுள் காட்டு யானை குறித்த நபரினை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் அயலில் உள்ள வயல் காவலில் இருந்த விவசாயிகளால் மீட்டெடுத்து தாண்டியடி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.