விமல் மீது தாக்குதல் முயற்சி!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மீது இன்று தாக்குதல் நடத்துவதற்கு நபர் ஒருவர் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் 9 சுயாதீனக் கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்கு விமல் வீரவன்ச எம்.பி. சென்றிருந்தார்.

அதன்பின்னர் பெலவத்தைப் பகுதியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க விமல் முற்பட்டார்.

இதன்போது நபர் ஒருவர் விமலைத் தாக்க முற்பட்டார். விமலின் பாதுகாப்புத் தரப்பினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்து விமல் வீரவன்ச வெளியேறினார்.

Leave A Reply

Your email address will not be published.