38 கிலோ ஹெரோயினுடன் தாயும் மகனும் மாட்டினார்கள்.

ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

39 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் 46 வயதுடைய தாயும் 22 வயதுடைய அவரது மகனுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது எனக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்படட சுற்றிவளைப்பின்போதே ஹெரோயினுடன் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.