பரபரப்பான சாலையில் இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள முக்கிய நகர சாலையான கலூரில் தேசாபிமானி சந்திப்பு அருகே ஒரு இளைஞர் நடுரோட்டில் தன்னைதானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். கத்தியால் கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொண்டார். அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் அந்த இளைஞர் கொச்சி தோப்பம்பட்டியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பது தெரியவந்துள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.