கோட்டாபய , பதவி விலகுவது தாமதமாகலாம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பாதுகாப்பான வழி கிடைக்காவிட்டால், அவரது பதவி விலகுவது தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வழிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது உரியவர்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை தீவை விட்டு வெளியேற பல தடவைகள் முயற்சித்தார்.

ஆனால், விமான நிலையத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

அதன் பின்னர், இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் கடற்படை கப்பல்கள் மூலம் தீவை விட்டு வெளியேற முயற்சிப்பதாக AFP செய்தி சேவை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.