போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை!

கொழும்பு – கொள்ளுப்பிட்டி – ப்ளவர் வீதியில் பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முற்பகல் பிரதமர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

இதையடுத்துப் போராட்டக்காரர்களைத் தடுத்துநிறுத்த வீதித் தடைகளைப் பொலிஸார் போட்டனர். எனினும், வீதித் தடைகளைத் தள்ளிவிட்டு பிரதமர் அலுவலகத்துக்குள் பிரவேசிக்கப் போராட்டக்காரர்கள் முயன்றனர்.

இதன்போது, அவர்களைக் கலைக்கக் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.