பதில் ஜனாதிபதியான ரணில் விசேட அறிவிப்பு.

பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைக்கு அமையவே, தான் ஊரடங்கு மற்றும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உத்தரவிட்டதாகப் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் தெரிவித்தார்.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமக்குத் தேவையான ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கும் நோக்கிலேயே, பிரதமர் அலுவலகத்தைச் சிலர் முற்றுகையிட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றுவதற்கு அவர்களுக்கு எந்தத் தேவையும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, ஊரடங்கு மற்றும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆலாசனை வழங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.