நேற்று மாலை வரை, ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் வரவில்லை.

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை இன்று வழங்குவதாக ஜனாதிபதி தமக்கு உறுதியளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியுடன் உரையாடிய நேரத்தில் ஜனாதிபதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இருந்ததாகவும், அவர் சிங்கப்பூர் சென்றதும் கடிதத்தை பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாகவும் சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முப்படை மற்றும் காவல்துறை தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.