கொழும்பில் நேற்று போராட்டக்காரர்களால் இராணுவச் சிப்பாயின் துப்பாக்கி அபகரிப்பு.

நாடாளுமன்றம் செல்லும் வீதியான பத்தரமுல்லை- பொல்துவ சந்திக்கு அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் இராணுவச் சிப்பாய் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார் எனவும், அவரது ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 60 உயிர்ப்புள்ள தோட்டாக்களும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டன என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இராணுவச் சிப்பாய் வெல்லவாய இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.