கோட்டாவின் பதவி விலகல் கடிதம் இன்னும் வரவில்லை சபாநாயகர் கூறுகின்றார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜிநாமாக் கடிதம் இன்னும் எனக்கு வரவில்லை.”

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி (நேற்று) பதவி விலகுவார் எனவும், 13 ஆம் திகதி மாலைக்குள் அவரின் இராஜிநாமாக் கடிதம் கிடைக்கப்பெறும் எனவும் சபாநாயகர் பல தடவைகள் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.

எனினும், இன்று ஜூலை 14. இதுவரை பதவி விலகல் கடிதம் கிடைக்கப்பெறவில்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் சிங்கப்பூர் சென்றடைந்ததன் பின்னர் அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவதாக ஜனாதிபதி நேற்றுப் பிற்பகல் தன்னிடம் அறிவித்துள்ளார் என்று நேற்று மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.