பாதுகாப்பு துறையைச் சேர்ந்த இருவருக்கு கடுமையான தாக்குதல் (வீடியோ)

நேற்றைய தினம் (13) பாராளுமன்ற சுற்றுவட்டத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட்ட மக்கள் , இராணுவ வீரர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கி அவர்களது ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை கொள்ளையடித்துள்ளனர்.

தற்போது, ​​இந்த இரண்டு அதிகாரிகளும் இராணுவ வைத்தியசாலை மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ ஊடகப் பணிப்பாளர் – பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன விடுத்துள்ள அறிக்கையில், இந்த அதிகாரிகளிடமிருந்து தாக்கப்பட்டு கடத்தப்பட்ட தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் வன்முறைகள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு கீழே உள்ள வீடியோவில் உள்ளது

Leave A Reply

Your email address will not be published.