நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் காலமானார்

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.

பிரதாப் போத்தன் கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்தார். இந்த நிலையில், இன்று காலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை எட்டு மணியளவில் காலமானார்.

1952ல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குலத்திங்கள் போத்தன் – பொன்னம்மா போத்தன் தம்பதிக்குப் பிறந்த பிரதாப் போத்தன், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அழியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமான பிரதாப் போத்தன், மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார்.திரைக் கலைஞர் ராதிகாவுடனான இவரது திருமணம் முறிந்த பிறகு, அமலா சத்யநாத் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.