எதிர்காலத்தில் கோட்டாவின் பெறுமதியை இந்தச் சமூகம் உணரும் நிலை ஏற்படுமாம்.

எதிர்காலத்தில் கோட்டாபய ராஜபக்சவின் மதிப்பையும் பெறுமதியையும் இந்தச் சமூகம் அறியும் என்பதில் எவ்விதமான சந்தேககமும் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச இராஜிநாமா செய்தமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கையொன்றை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, பதவியை இராஜிநாமா செய்தது இதுவே முதன்முறை. அதற்கு நீண்டகால பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கே காரணமாக அமைந்தன.

30 வருடகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பாதுகாப்புச் செயலாளராக பாரிய சேவையாற்றிய ஜனாதிபதியின் இன்றைய இந்தத் தீர்மானமானது அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பையும் நாட்டுப் பற்றையும் வெளிக்காட்டுகின்றன.

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்தச் சமூகம் அறியும் என்பதில் எவ்விதமான சந்தேககமும் இல்லை” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.