இராஜதந்திர ரீதியில் கோட்டாவுக்கு உதவி – மாலைதீவு அரசு அறிவிப்பு.

இலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையை அடுத்து அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு, இராஜதந்திர ரீதியில் இடைமாறல் விசாவுக்கு ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டது என மாலைதீவு அரசு அறிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச, நாட்டில் இருந்து வெளியேறி மாலைதீவுக்குச் சென்று பின்னர் சிங்கப்பூரைச் சென்றடைந்தார்.

இந்தநிலையில், அவர் மாலைதீவில் தரையிறங்கியமை தொடர்பில், அந்த நாட்டின் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியிருந்தது.

இதையடுத்து மாலைதீவு அரசு தமது விளக்கத்தை வழங்கியிருக்கின்றது.

இலங்கை அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இலங்கையின் இராணுவ விமானத்தில் கோட்டாபய ராஜபக்சவும், அவரது பாரியாரும், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் மாலைத்தீவுக்கு அழைத்துவரப்பட்டு பின்னர் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று மாலைதீவின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.