கோட்டாவை ஓட ஓட விரட்டியடித்த ‘கோல்பேஸ்’ போராட்டத்துக்கு இன்றுடன் 100 நாட்கள் நிறைவு.

கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவுசெய்கின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து இராஜிநாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர் குழுவால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக நாடெங்கும் மக்கள் போராட்டம் வெடித்தது.

இந்த அறவழிப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வு காலிமுகத்திடல் போரட்டக்களத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

இதன்போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.