மேகதாது குறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் ஆலோசிக்க உச்சநீதிமன்றம் அனுமதி..

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடைவிதிக்கக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், கடந்த மாதம் 17-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவது குறித்த கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது

மேலும், மேகதாது அணை குறித்து விவாதிக்க தடைவிதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேகதாது அணை பற்றி காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.