ரணில் பதவிப் பிரமாணம் செய்தவுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை…

ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ள காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு கோட்டை பொலிஸார் தயாராகி வருகின்றனர்.

சட்டமா அதிபர் திணைக்களம் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கோட்டை பொலிஸில் அதன் செயலாளர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் இந்த நீதிமன்ற உத்தரவை பெற பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை போராட்டம் என்ற போர்வையில் பிரதமர் அலுவலகத்தையும் , ஜனாதிபதி அலுவலகத்தையும் கையகப்படுத்துவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.