ரயிலில் இருந்து தள்ளி விழுத்தி பாதுகாப்பு உத்தியோகத்தரை படுகொலைசெய்த பயணிகள்.

குடிபோதையில் இருந்த ரயில் பயணிகள் இருவர், ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை ரயிலில் இருந்து உதைத்துத் தள்ளி விழுத்திப் படுகொலை செய்துள்ளார்.

இன்று காலை வெயங்கொடைப் பகுதிக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் இருந்த ரயில் பயணிகள் இருவர் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொழும்பு – யாழ்ப்பாணம் இன்டர்சிட்டி ரயிலில் இருந்து உதைத்துத் தள்ளி விழுத்தியதில் குறித்த பாதுபாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.