“ரணில் – ராஜபக்சக்களின் தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டிப்போம்” – யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்.

கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“கோல்பேஸ் போராட்டக்காரர்கள் மீதான ரணில் -ராஜபக்சக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம’ பகுதிக்குள் நேற்று அதிகாலை நுழைந்த முப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்த கொட்டகைகளை அகற்றியதுடன் போராட்டக்காரர்கள் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். குறித்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே யாழில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.