கறுப்பு ஜூலைக் கலவரத்தில் பலியானவர்களை யாழ். சென்று நினைவேந்தினார் சுமந்திரன் எம்.பி.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

வடமராட்சியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை முன்னான் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

1983ஆம் ஜூலை மாதம் 23, 24, 25 ஆகிய தினங்களில் நடந்த கறுப்பு ஜூலைக் கலவரத்தின்போது தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் சொத்துக்களும் அழித்து நாசமாக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.