கயிறு கழுத்தில் இறுகி 11 சிறுவன் உயிரிழப்பு.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பாரதி வீதியிலுள்ள வீடொன்றில் கட்டப்பட்ட கயிறு கழுத்தில் இறுகி 11 சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பாரதி வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய மதிவாணன் ஜனுசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் முன்பகுதியிலுள்ள விறாந்தையின் கூரையில் பொருட்களை நிறுப்பதற்கான தராசுக்காக நயிலோன் கயறு கட்டப்பட்டிருந்துது. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் குறித்த சிறுவனின் தாயார் வீட்டினுள் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். இதன்போது தனிமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குறித்த கயிற்றில் கழுத்தை உள்நுழைத்து விளையாடிக்கொண்ட நிலையில் கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.