அழைப்பு வந்தால் பரிசீலிப்போம் – சர்வகட்சி அரசு தொடர்பில் மைத்திரி கருத்து.

“சர்வகட்சி அரசில் இணையுமாறு எமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கலாம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், தொழிற்சங்க பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.

Leave A Reply

Your email address will not be published.