மைத்திரி வீட்டிற்கு செல்லும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்ந்த கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள வீட்டை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து தற்போது ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் உள்ள சட்ட நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அங்கு வசிக்க முடியாது.

எனவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்து வந்த வீட்டை ஜனாதிபதிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதி இந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.