கிளிநொச்சியில் வீதியோரத்திலிருந்து பிறந்து மூன்று நாட்களேயான சிசு மீட்பு.

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் பிறந்து 3 நாட்களேயான சிசு ஒன்று வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய துணியால் சுற்றப்பட்ட நிலையில் பொலிஸாரால் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை அக்கராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.