இ.போ.ச. யாழ். சாலை பணியாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு.

இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை பணியாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றார்கள்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை ஊழியர்கள் நேற்றுப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்த நிலையில் இதுவரை தாக்குதலை நடத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு உள்ளே வெளியில் இருந்து வருகின்ற பஸ்கள் உள்நுழையாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டதுடன் யாழ். சாலையின் செயற்பாடுகள் முடங்கிக் காணப்படுகின்றதால் வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றும் செயற்பாடுகளும் முடங்கியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 22ஆம் திகதி இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச. பஸ்ஸின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச. சாலை ஊழியர்களால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதலை மேற்கொண்ட ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.