போராட்டக்காரர்களால் பறிக்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 13ஆம் திகதி பொல்கொல் சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்களால், பறிக்கப்பட்ட துப்பாக்கி , பாராளுமன்ற நீர்த்தேக்கத்தில் இருந்து கடற்படை சுழியோடும் படையினரால் வெற்று தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2 துப்பாக்கிகளில் , மற்றைய துப்பாக்கியும் நீர்த்தேக்கத்தில் உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் மேலதிக தேடல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.