பயந்து ஒளியவில்லை கோட்டா; மீண்டும் இலங்கை வருகின்றார் அரசு இன்று அறிவிப்பு.

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சத்தால் வெளிநாட்டில் பதுங்கித் தலைமறைவாகவில்லை. அவர் சட்டபூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கோட்டாபய நாடு திரும்புவார் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், வரும் திகதி, விவரம் குறித்த தகவல்கள் தனக்குத் தெரியாது எனவும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தகவல் வெளியிட்டார்.

அதேவேளை, சர்வகட்சி அரசமைப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பின் பிரகாரமே இடம்பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.