சபை முதல்வராகின்றார் சுசில்.

நாடாளுமன்றில் சபை முதல்வராக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நியமிப்பதற்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனர்.

சபை முதல்வராகச் செயற்பட்ட தினேஷ் குணவர்தன தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீன உறுப்பினராகச் செயற்பட்ட சுசில் பிரேமஜயந்த கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.