எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

பதுளை – பசறை பிரதான வீதியில் ஹிந்தகொட பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனப் பதுளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருக்கும், வியாரகொட பகுதியைச் சேர்ந்த எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறினால், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வந்த நபர் 9 மி.மி. ரகத் துப்பாக்கியால் வானத்தை நோக்கி நான்கு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

எவருக்கும் எந்தவிதமான காயங்கள் ஏற்படாத போதிலும் சந்தேகநபரைக் கைதுசெய்யும் வகையில் விசாரணைகளைப் பதுளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.