விரைவில் இலங்கைக்கு விமானங்கள் வருவது நிறுத்தப்படும்…?

இலங்கைக்கான விமான சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் பாரிய சேதம் ஒன்று ஏற்பட்டால் காப்புறுதியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கையர் எவருக்கும் உலகில் எந்த நாட்டுக்கும் செல்ல விசா வழங்கப்படாத நிலை வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் விலையை குறைக்கலாம் என்று கூறுவது முட்டாள்தனமான கதை என்றும், புதிய முதலீட்டாளர்கள் வருவதல்ல , உள்ள முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.