அரகலயவுடன் சம்பந்தப்பட்ட 5 பேர் கைது

அரகலய போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (30) இளைஞர்கள் நேற்றிரவு நுவரெலியா, களுகெலே பொனஸ்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்தார்.

போராட்டம் தொடர்பில் கொழும்பு ஜனாதிபதியின் மாளிகைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியாவில் வசிக்கும் ஒருவரை கைது செய்ய நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட பிடியாணையை நிறைவேற்ற நுவரெலியா பொலிஸார் சென்ற போது சந்தேகநபரின் வீட்டில் நான்கு இளைஞர்கள் தங்கியிருந்துள்ளனர்.

தாம் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தால் , நுவரெலியாவில் தலைமறைவாக இருந்ததாக நான்கு இளைஞர்களும் கூறியதால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் நிலைய பரிசோதகர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிங்கிரிய, கொதடுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.