ஏனைய மாவட்டங்களைவிட யாழ்ப்பாணத்திலேயே ’கியூ.ஆர்’முறை வெற்றி.

இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே ’கியூ.ஆர்’ நடைமுறை வெற்றியளித்திருக்கின்றது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ’கியூ.ஆர்’ நடைமுறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில், 6 ஆயிரம் லீற்றருக்கும் அதிகளவான பெற்றோல்’கியூ.ஆர்’ நடைமுறைக்கு ஏற்ப வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏனைய மாவட்டங்களில் விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.