மொட்டு கட்சியின் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் பல எதிர்கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பதவிகளை பெற உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பொதுஜன பெரமுனவுக்கு மேலதிகமாக, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அதே வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. .

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய உள்ளவர்களில் தற்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் அடங்குவதாக மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதோடு, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் அப் பகுதிக்கான அமைப்பாளர் பதவிகளை அவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.