ரணிலின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம்: பிரதான சந்தேகநபர் உட்பட 3 பேர் கைது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குத் தீ வைத்த சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் நேற்றிரவு பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வைத்து இவர்களைக் கைதுசெய்தனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

மடபாத்த மற்றும் கொழும்பு – 05 பிரதேசங்களைச் சேர்ந்த 18 – 22 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின்போது இந்தத் தீ வைப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், அவரது தனிப்பட்ட நூலகமும் எரிந்து நாசமாகியுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.