நீலகிரியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி, தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி இயங்கும் பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.