கல்கிஸை துப்பாக்கிச்சூடு: 2 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்.

கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் பாதுகாப்புக் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிக் கூட்டில் இருந்த ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸ் பாதுகாப்பையும் மீறி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு இடம்பெற்றபோது பாதுகாப்புக் கடமையில் இருந்து பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.