துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

இருவேறு பிரதேசங்களில் இருவர் துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

நவகமுவ, ரணால பிரதேசத்தை சேர்ந்த 36 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்துக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரது வீட்டைச் சோதனை செய்தபோது வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு அவிஸாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டுவாவ பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.