சர்ச்சைக்குரிய சீன கப்பல் இலங்கை வருவதில் சிக்கல்

எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த சீன யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த கப்பல் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சீன அரசாங்கத்திடம் அரசாங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கப்பலின் வருகை தொடர்பில் இந்திய அரசாங்கம் மட்டுமன்றி அமெரிக்க அரசாங்கமும் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

இதன்படி, இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்திற்கு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.