ஜனாதிபதிக்கு 5 ஆளுநர்கள்.. பொஹொட்டுவவிற்கு 4 பேர்.. பல அரச நிறுவனங்களின் தலைவர்கள் நீக்கம்..

ஆளுநர்கள் இடமாற்றம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐந்து புதிய ஆளுநர்களை நியமிக்க உள்ளார்.

மேல், சப்ரகமுவ, வடமேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு ஜனாதிபதி புதிய ஆளுநர்களை நியமிக்க உள்ளார். ஏனைய மாகாணங்களுக்கு தற்போதைய ஆளுநர்கள் அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும், பெரும்பாலான அரசு நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் குழுக்களில் தற்போதுள்ள தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவை நீக்கிவிட்டு புதிய நியமனங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.