சீனக் கப்பல் தலையிடி: பின்னணியில் பஸில்! – டியூ குணசேகர குற்றச்சாட்டு.

சீனக் கப்பல் பிரச்சினை தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டுக்குப் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச உள்ளிட்ட குழு இருக்கின்றது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“சீனக் கப்பல் விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு சீனாவின் நல்லெண்ணத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டால் அதனை இரு நாடுகளும் இணைந்து தீர்த்துக்கொள்ள வேண்டும்.

வேறு தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை. அணிசேரா கொள்கையின்படி இலங்கை செயற்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.