வடக்கில் காணி விற்பனை மோசடி: பாதிக்கப்பட்டோர் முறையிடுங்கள்! – ஆளுநர் வேண்டுகோள்.

“வடக்கு மாகாணத்தில் உள்ள தமது காணி மோசடியாக ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது போலியான உறுதிப்பத்திரங்களால் ஏமாற்றப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது விவரங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும்.”

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு மாகாணத்தில் உள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளிலோ அல்லது வேறு எந்தப் பாகத்திலும் இருக்கின்ற நிலையில் அவர்களின் காணிகள் மோசடியான வழியிலோ போலியான உறுதிப் பத்திரங்கள் மூலமோ அபகரிக்கப்பட்டு இருந்தால் அது தொடர்பில் ஆளுநர் செயலகம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கின்றது. ஆகவே, பாதிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் உரிமை கோரக் கூடிய ஆதாரங்களுடன் காணிப்பதிவு பற்றிய விவரங்களை பழைய பூங்கா வீதியில் உள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.