திருடிய 15 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் ஒருவர் வசமாக சிக்கினார்.

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தேகம – ஹல்பதொட்ட பகுதியில் மீட்டியகொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதன்போது, கடந்த 2ஆம் திகதி மீட்டியகொட – அளுத்வல பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து திருடப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

8 தங்க வளையல்கள், 5 கழுத்தணிகள், 3 மோதிரங்கள், 3 ஜோடி காதணிகள் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகளுடன் 31 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பத்தேகமவில் உள்ள அடகுக் நிலையம் ஒன்றில் இரண்டு தங்க நகைகளை அடகு வைத்துள்ளமையைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தகி கொள்ளைச் சம்பவத்தில் மேலும் சில நபர்கள் தொடர்பட்டுள்ளனரா என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகநபர் பலப்பிட்டிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.