கோட்டா பேங்கொக் சென்ற தனியார் விமான செலவை அரசே செலுத்தியது – பந்துல குணவர்தன

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு செல்ல அரச செலவிலேயே தனிப்பட்ட விமானம் வழங்கப்பட்டது என , இன்று (16)நடந்த ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன ஏற்றுக் கொண்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்படியான வரப்பிரசாதத்தை பெறுவதற்கான உரிமை அவருக்கு உள்ளது என்றார் அவர்.

பொதுமக்களின் வரித் பணத்தில் விமானம் ஒன்றை பெறும் உரிமை முன்னாள் ஜனாதிபதிக்கு உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலழிக்கும் போதே அவர் அவ்வாறு பதிலழித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன , ஜனாதிபதி சட்டத்தின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உயர் வரப்பிரசாதம் , அவர் இறந்த பிறகும் கூட , அவரது மனைவிக்கு கிடைக்கும் என தெரிவித்தார்.

இதுபோன்ற வரப்பிரசாதங்களை முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவியர் பெற முடியும் என தெரிவித்த அமைச்சர் , மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவிக்கு அப்படியான வரப்பிரசாதங்கள் கிடைப்பதாகவும் , அது குறித்த மேலதிக விபரங்களை எதிர்காலத்தில் தர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.