கோட்டாபய நாடு திரும்புகிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இரகசியப் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறும் போதே அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசாங்க காலத்தில் மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது இரகசிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இவரிடம் இருந்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    திருடன் வாறான் கவனமாக இருக்கவும்
    ரணில் கோட்டாவின் …………..டி கழுவிக்கொண்டிருப்பான்
    மக்கள் தான் பாவம் இன்னமும் கஷ்டப்படப் போகிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.