சர்வகட்சி அரசாங்கம் மக்களுக்கு கேடு : மக்கள் மன்ற பணிகள் ஆரம்பிக்கப்படும்.

பாராளுமன்றத்தில் உள்ளவர்களை ஒன்றிணைத்து கட்டியெழுப்பப்படும் சர்வகட்சி அரசாங்கத்தை தாம் விரும்பவில்லை என காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட மக்கள் சபை முறைமையை காலிமுகத் திடல் போராளிகள் முன்வைத்துள்ளதாகவும், போராட்டத்தின் அடுத்த கட்டமாக மக்கள் மன்ற பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வீரசேகர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.