பல அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்? – ரணில் விக்கிரமசிங்க (Video)

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘தி எகனாமிஸ்ட்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகிய நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நோக்கத்தில் உள்ள நிறுவனங்களாக ஜனாதிபதி பெயரிட்டுள்ளார்.

இது தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தனியார்மயமாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏறக்குறைய 40 அரச நிறுவனங்களை விற்பனை செய்ய ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்க தலைவர் சந்தன சூரியஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

முதன்முறையாக திணைக்களங்களும் இந்த வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சந்தன சூரியராச்சி சுட்டிக்காட்டுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.