ரணிலுடன் பஸில் நேரில் பேச்சு! – ‘மொட்டு’வின் முக்கியஸ்தர்களும் பங்கேற்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான பேச்சு இன்று நடைபெறவுள்ளது. இதில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெறும் முதலாவது பேச்சு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வகட்சி அரசை ஸ்தாபிக்க முன்னெடுக்கும் செயற்பாடுகள், பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்தப் பேச்சின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் பஸில் ராஜபக்ச முன்வைத்த கோரிக்கை குறித்தும் இதன்போது பரிசீலனை செய்யப்படவுள்ளது எனவும் அறியமுடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.